Search This Blog

Sunday, October 25, 2015

கங்காருக்கு பெயர் வைத்தவன் ஆஸ்திரேலிய தமிழன்

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா மற்றும் அட்லாண்டிஸ் என்ற இரண்டு பெயர்களும் குறிக்கும் சொல் ஆதித்தேயம் என்பதே. இங்கிலாந்து என்ற வார்த்தைக்கு  இத்தாலிச்சொல் இங்கில் தெர்ரா (Inghil terra) (அதாவது இங்குள்ள தரை. அங்குள்ள தரை அது ஐரோப்பா கண்டப்பகுதி) அதேபோல அட்லாண்டிஸ் என்பதும் அட்லாந்து - அதி லாந்து - ஆதி லாந்து - ஆதி நிலம்.


அதேபோல ஆஸ்த்ரேலியா என்பதும் ஆதித்தேயம் என்பதிலிருந்தே மருவி இருக்கவேண்டும். காரணம் அறிவியல் பூர்வமானதும் கூட. ஆஸ்திரேலிய பூர்வகுடி மக்களுடைய ஜீன்களையும் இந்திய பழங்குடி மக்களின் ஜீன்களையும் ஆய்வுக்குட்படுத்திய போது மிகபொருத்தமாய் இருந்ததாய் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  ஆஸ்திரேலிய பூர்வகுடி பெரியவரும், சிறுவர்களும் தமிழர்களைப்போல் இல்லையா? 


DNA ஆய்வு முடிவுகள்:

 
அறிவியல் ஆய்வு முறையில் பிரித்தானிய ஆக்ஸ்போர்ட்டின் DNA பரிசோதனையில் தென்கிழக்காசிய மக்களின் தொன்மை 50,000 வருடங்கள் என்றும் அவர்களே பூர்வ குடி மக்கள் என்றும் , அவர்கள் மத்திய தரைகடல் பகுதியிலிருந்த வெளிவந்த தமிழர்களின் ஒரு கிளையினர் என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது.காண்க


ஒரு ஜீன் விளக்கப்படம், எவ்வாறு தென்னிந்தியர் ஆஸ்த்ரேலியாவிற்கு நெருக்கமானவர்கள் என்பதற்கு: மஞ்சள் நிற ஜீன் குறியீடு ஆத்திரேலிய பழ ங்குடியினருடையது. பச்சைக்குறியீடு தென்னிந்திய தமிழருடையது. 


மேலும் உலகின் பல நாட்டு நபர்களை விட தமிழர்கள் நெருங்கிய தொடர்புடையவர்கள்.


கங்காரு
 

கங்காரு என்ற பெயர் எப்படி வந்ததுன்னு பலருக்கும் தெரியும் 
ஆஸ்திரேலியா வந்திறங்கிய ஒரு ஐரோப்பியர் அதிசயமாகத்தெரிந்த இந்த விலங்கினத்தை முதன்முறை பார்த்து பழங்குடிகளிடம் இதன் பெயரென்ன எனக்கேட்க, அவர் என்ன கேட்டார் என்று புரியாத அம்மக்களில் ஒருவர் கேட்டது புரியவில்லை என்று அவர்கள் மொழியில் சொன்னதையே அவ்விலங்கின் பெயராய் புரிந்துகொண்டு கங்காரு என்பதையே அவ்விலங்கின் பெயராக்கினார் என்பது வழக்கு. 
உண்மையில் அந்த விலங்குக்கு பெயர் வச்சவன் தமிழன்அந்த விலங்கின் பெயர் ஒரு தமிழ்பெயர்அது மார்சூப்பிகூகுள் போய் கங்காரு என்று தேடினால் அந்த விலங்கின் உட்குழு பெயர்மார்சூப்பியல் என்று வரும் 
Scientific classification
Kingdom:Animalia
Phylum:Chordata
Class:Mammalia
Infraclass:Marsupialia
Order:Diprotodontia
Family:Macropodidae
Genus:Macropus
Subgenus:Macropus and Osphranter

மார்சூப்பியல் சென்று தேடினால் அது ஓரியண்டல் என்று முடித்து கொள்கிறார்கள் 

ஏன் அந்த பெயர் ?  
எந்த விலங்கினத்தின் குட்டியும் அதன் தாயை விட பொதுவாக பத்தில் ஒரு மடங்கு அல்லதுபதினைந்தில் ஒரு மடங்கு சின்னதாக இருக்கும், மனிதன் உட்பட.
ஆனால் இந்த கங்காரு மட்டும் பிறக்கும் பொது  தாயை விட 500 மடங்கு சிறியது.




தாய்க் கங்காருவின் வயிற்றுப்பையுள் செல்லும் குட்டி வெளியே வராதுவர முடியாது.ஏறக்குறைய 4 வருடங்கள் தாயின் வயிற்றுப்பைக்குள்தான் அதற்கு வாழ்க்கை. அதனாலேயேதமிழர்கள் அந்த விலங்குக்கு வைத்த பெயர் மார்சூப்பி.
சூப்பி என்ற தமிழ்ச்சொல் இன்று தென் மாவட்டங்களில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. இதைப்போல் சங்க இலக்கியங்களில் பல தொன்மையான  தமிழ்ச் சொற்கள் இன்று தென் கரை மாவட்டங்களில் புழக்கத்தில் இருப்பதை வேறொரு பதிவில் காணலாம்.

கவரிமான் கதை

கவரிமான் கதை.

கற்பனை கதை: கவரிமான் ஒரு முடி இழந்தாலே அது தன்மானம் இழப்பதால் உயிர் துறந்துவிடும்.
நடைமுறை உண்மை: கவரி மா என்பதுதான் அவ்விலங்கின் பெயர். காண்க:  மா என்றால் பெரிய என்று பொருள்.

கவரி வீசுதல் என்றால் மயிலிறகால் காற்று வீசுதலைக் குறிக்கும். ஆக, கவரி என்பது முடி.

இமய மலைப்பகுதிகளில் வாழும் கவரிமா என்னும் விலங்குக்கு இயற்கையே குளிர் தாங்கக் கொடுத்திருக்கும் முடியினை இழந்தால், குளிரால் அது இறந்துவிடும்.
இந்த மா என்பது யாக் எருமையையே குறிக்கும் யா என்றாலும் பெரிய என்றே பொருள்.
அந்த யாக் எருமை இதுதான்.








ஆக அவ்விலங்கின் பெயர் கவரிமான் இல்லை, கவரிமா(டு). ஆனால் பட்டிமன்றங்களில் நம்மவர்கள் கவரிமான் பரம்பரை பற்றிக்கொடுக்கும் உரைவீச்சு கொஞ்சம் அதிகம்தான். 

Monday, September 28, 2015

திருப்பதி ""முருகா"" அரோகரா - திருப்பதியில் இருப்பது முருகன் சிலை

திருப்பதிக்குப் போய் மொட்டைபோட்டுவிட்டு வருகிறாராம்,அடங்கப்பா, எந்த பெருமாள் கோவிலிலாவது மொட்டைபோடும் வழக்கம் உண்டா?
*எந்த பெருமாள் வெறும் இரண்டு கைகளோடு இருக்கிறார்?
*எந்த பெருமாளுக்கு ஈஸ்வரன் என்ற சைவ(சிவன்) பெயர் உள்ளது?
*எந்தப் பெருமாள் கோவில் கொடிமரமும் தெப்பக்குளமும் இல்லாமல் இருக்கிறது?
*எந்த பெருமாள் சிலையாவது இடது கையை கீழே தொங்கப் போட்டபடி உள்ளங்கையை மட்டும் மடக்கி உயர்த்தியவாறு உள்ளதா?
(படத்தில் பார்க்க)
*கோவிலைச் சுற்றி கிடைத்துள்ள கல்வெட்டுகள் பெரும்பாலும் தமிழ்க் கல்வெட்டுகள் என்பதை அறிவீரோ?
*கோவில் சுவர் முழுக்க தமிழ் எழுத்துகள் சுண்ணாம்படித்து மறைக்கப்பட்டிருப்பதை கவனித்துள்ளீரா?
*சங்கும் சக்கரமும் தோளில் ஒட்டவைத்திருப்பதையும் அதன் பின்னால் போலியான பின்கைகள் ஒட்டவைக்கப்பட்டிருப்பதையும் கூர்ந்து நோக்கியிருக்கிறீரா?
*, திருமால் கோவில் என்றால் கருடன் இருக்கவேண்டும்; இங்கு மூலைக்கொரு சிங்கம்தான் இருக்கிறது.
*பெருமாள் கோவில்கள் பெரும்பாலும் மலைமீது இருக்காதே?
*தங்கத்தாலும் வைரத்தாலும் அடக்கம் செய்யப்பட்டுள்ள சிலை முருகர் சிலை என்றால் நம்புவீரா?
சங்கநூல்கள் வேங்கடத்தைப் பாடுகின்றன; (ஆனால் முருகன் என்று பாடவில்லை அதேபோல் திருமாலே என்றும் பாடவில்லை); இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் 'வேங்கடத்து நெடியோனைப்' பாடுகிறார்.அருணகிரிநாதர் முருகன் என்று அடையாளம் கண்டு 'வேந்த குமார குக சேந்த மயூர வட வேங்கட மாமலையில் உறைவோனே!' என்று பாடுகிறார்.
சைவர்களும் வைணவர்களும் திருப்பதியைச் சொந்தம்கொண்டாட 12ம் நூற்றாண்டில் ராமானுஜர் கருவறையில் சங்கு சக்கரத்தை வைத்துவிட்டு அரசமுத்திரையோடு பூட்டு போட்டாராம்; மறுநாள் காலை திறந்துபார்த்தால் சங்கும் சக்கரமும் சிலைமேல் இருந்ததாம்; சைவர்கள் தோல்வியை ஒப்புக்கொண்டனராம்; உடனே சங்கு சக்கரத்தை சிலையோடு பொருத்தி வைணவத்தலமாக்கிவிட்டார்களாம்.

இணைப்பு ( எமது குருவின் குரு தவத்திரு அரிந்தார்க்கினியனார்(சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் அவரின் அகவை 124), மற்றும் அதற்கு முன்னர் இரண்டு யோகியர்களை சந்தித்து பேச நேர்ந்த போது…... திருப்பதியில் இருப்பது முருகன் சிலைதான் என்பதை ஆணித்தரமாக சொல்லியது என் நினைவில் இருக்கிறது!.......... கிருட்ண தேவராயர் காலத்திலேயே முருகன் கோவிலாக இந்த அது வைணவ கோயிலாகாவும் பெருமாளாகவும் மாற்றப்பட்டதாகவும் சொன்னார்கள்!......மேலும் அங்கு கொங்கணவர் என்ற சித்தரின் சமாதியும் உப்புக்கட்டுமுறையில் இருக்கும் நவபாசாண முருகன்( இப்போது பெருமாள்) சிலையுமே சிறப்பு என்றனர்!........- கே.முருகேசன் )
ஆம்ஸ்டர்டாமில் இருந்து ரோஜா மலர்கள், ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சீனாவில் இருந்து புனுகு, பாரீஸில் இருந்து வாசனைத் திரவியங்கள் என வளம்கொழிக்கும் திருப்பதி 2013ம் ஆண்டில் மட்டும் 860கோடி வருமானம் ஈட்டியுள்ளது; இந்த ஆண்டு 1000கோடி எதிர்பார்க்கப்படுகிறது;
எல்லாம் தெலுங்கருக்குத்தான்.
திருப்பதி மட்டுமா திருக்காளத்தியும் (காளஹஸ்தி) போனது;
(நல்லவேலை ம.பொ.சி படைவீடான திருத்தணியை மீட்டுக்கொடுத்தார்;
திருப்பதியைச் சுற்றியிருக்கும் தமிழ் ஊர்களாவன,
சந்திரகிரி (தமிழர் - 60 %), சித்தூர் (தமிழர்- 65%), குப்பம்(தமிழர்-60 %), நகரி(தமிழர்-55%), புங்கனூர்(தமிழர்-50%), சத்தியவேடு(தமிழர்-70 %),
திருக்காளத்தி(தமிழர்-65 %),
புத்தளப்பட்டு(தமிழர் -55%),
திருப்பதி(தமிழர்-55 %),
பல்லவனேறி(தமிழர்-50 %), நெல்லூர்(தமிழர்-55 %), கோவூர்(தமிழர்-60%),
உதயகிரி(தமிழர்-55%) ...
1300களில் நாய்க்கெராட்சி வரும்வரை வேங்கடமலை என்ன அதற்கும் வடக்கே துங்கபத்திரை ஆற்றுக்கு தெற்கே என்றும் வேற்றினத்தார் நுழையவில்லை; காலம் காலமாக தமிழர் பகுதியாக இருந்த வேங்கடம் இன்று தெலுங்கர் ஆட்சிக்குப் போய்விட்டது;
கோவிலைக் கட்டியவன்உன் பாட்டன் ஆனால் அங்கே தெலுங்கன் உன்னை 'ஜருகண்டி' என்று பிடித்துத் தள்ளுவான்; பாலாஜி என்ற பெயரே 200ஆண்டுகள் முன்பு கிடையாது வடயிந்தியன் பாலாஜி என்ற பெயரை வைப்பான்; தமிழன் அந்தப் பெயரை வைத்துக்கொண்டு திரிகிறான்;
இருநூறாயிரம்(2லக்சம்) தமிழனைக் கொன்றுதள்ளிய ராஜபக்ச மாமியார் வீட்டுக்கு வருவதுபோல திருப்பதி வந்துபோவான்;
அவன் தமிழகத்திற்கு வந்துபோனால்கூட எவனும் கேட்கமுடியாது.
உலகிலேயே பெரிய முருகன் சிலை மலேசியாவில் பத்துமலையில் உள்ளது; இப்போது அதற்கு அருகிலேயே ராமர்கோவிலும் ஹனுமான் சிலையும் வந்தாயிற்று.
சபரிமலையில் இருக்கும் ஐயப்பன் சிலையைச் செய்து அனுப்பியவன் தமிழன்; ஆனால் அங்கே வெந்நீர் ஊற்றிக் கொலைசெய்யப்பட்டான் ஒரு தமிழன்; தமிழன் என்றதும் மலையாளி கொலையாளி ஆகிவிடுகிறான்;
கேரளாவில் மலைமலையாக தங்கம் கிடைத்த பத்மநாபசுவாமி கோவில் கடைசி அறை திறக்கப்படவில்லை; அந்த அறையில்தான் தங்கம் தமிழருக்குச் சொந்தம் என்று நிறுவும் சான்றுகள் உள்ளதாக தமிழுணர்வாளர்கள் கூறுகின்றனர்;
தங்கத்தை மலையாள அரசு வைத்துக்கொண்டது;
கண்ணகிக் கோவில் தமிழக எல்லைக்குள் உள்ளது ஆனால் மலையாள காவல்துறை அங்கே பண்ணுகிற அட்டூழியம் தமிழன் எவ்வளவு கையாலாகாதவன் என்று நிறுவுகிறது; கண்டியை 'நுவர' என்றாக்கி சிங்களவன் வைத்துக்கொண்டான்; 'சமணவெள்ளைக்குளத்தை' 'ஸ்ரவணபெலகோலா' என்றாக்கி கன்னடவன் வைத்துக்கொண்டான்; தஞ்சை பெரியகோயில் சோழர்காலத்து ஓவியங்களுக்கு மேலேயே நாய்க்கெர்கள் ஓவியம் வரைந்து சோழர் கல்வெட்டுகளைத் திருத்தி பெயர்த்து தமிழ் வரலாற்றை அழிக்க முயன்றுள்ளனர்;
குமரி அன்னை கோயிலை விட விவேகானந்தர் பாறையும் காந்தி மண்டபமும் பரவலாகிவிட்டது; ராமேசுவரத்தில் எங்கே திரும்பினாலும் வடயிந்தியன் நிற்கிறான்; கேட்டால் எல்லாரும் ஹிந்துவாம்;
ஹிந்து என்ற வார்த்தையே 1829ல் ஆங்கிலேயன் உருவாக்கியது என்று தெரியுமா?
ஆசியாவிலேயே பெரிய கோபுரம் திருவரங்கத்தில்(சிறிரங்கம்) அமைத்து, சீனாவில் கேண்ட்டான்(cantan) அருகே குப்ளாய்கான்(1300கள்) காலத்தில் சிவன்கோவில் கட்டி, உலகிலேயே பெரிய வழிபாட்டுத் தளமான அங்கோர்வாட்டை (கம்போடியாவில்) எழுப்பி, தஞ்சை பெரியகோவிலும் மதுரை மீனாட்சி கோவிலும் இன்றும் வானாளவ நிற்குமாறு பேரரசு செலுத்திய தமிழினமா இன்று இப்படிக் கேடடைந்துவிட்டது?
உன்னைக் கடவுளும் காப்பாற்றவில்லை.
கடவுளை நீயும் காப்பாற்றவில்லை.

தமிழன் கண்ட தோப்புக்கரணம் ..! சொந்தம் கொண்டாடி காப்பி ரைட் வாங்கிய அமெரிக்கா.!

கம்ப்யூட்டரைப் பார்த்து வியக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். விரலசைவில் உலகையே வீட்டுக்குள் கொண்டு வந்து விடுகிற நம்முடைய மகத்தான கண்டுபிடிப்பு அது. இத்தனை சக்தி வாய்ந்த கம்ப்யூட்டரையே வடிவமைத்த சூப்பர் கம்ப்யூட்டர்தான் மனித மூளை. உடலின் உச்சியில், மண்டை ஓடு என்கிற திடப்பொருளின் பாதுகாப்பிற்குள் மூளைதண்டுவடத் திரவத்தில் மிதக்கிற அந்த ஒன்றரை கிலோ ‘மென்பொருளின்’ நலன்பேணும் அக்குபிரஷர் சிகிச்சைகள்.

ஒட்டுமொத்த உடலுறுப்புகளையும் இயக்கும் நம் மூளை, நரம்பு மண்டலத்தோடு பின்னிப் பிணைந்த தொடர்பில் இருக்கிறது. மூளை, நரம்பு மண்டலம் இரண்டும் சேர்ந்த அமைப்பை உடலின் ‘டெலிபோன் எக்ஸ்சேஞ்ச்’ எனலாம். தொடுதல், பார்த்தல், கேட்டல் போன்ற புலன் உணர்வுகள் மூலம் தகவல்களை நரம்புகள் மூளைக்கு அனுப்ப… அது அந்தத் தகவல்களை ஆராய்ந்து அதற்கேற்ப கட்டளைகளைப் பிறப்பிக்கிறது. இதிலிருந்தே உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் மூளையோடு தொடர்பு இருப்பதைத் தெரிந்துகொள்ளலாம். எனவே, உடலில் எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அது மூளையிலும் பிரதி பலிக்கும்.
வீட்டிலோ, வெளியிலோ தெரிந்தோ தெரியாமலோ ஏதேனும் தப்புதண்டா பண்ணி விட்டீர்கள். அப்போது, ‘மூளை இருக்கா?’ என்கிற வசையைக் கேட்டிருப்பீர்கள்தானே? எல்லா உறுப்புகளுக்கும் ஆர்டர் போடுகிற இடத்தில் இருப்பதால், நேரும் எந்த விளைவுக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டது மூளை மட்டுமே! எனவே அது, எனி டைம் அலர்ட்டாக இருக்க வேண்டியது அவசியம். இதயம் ஓய்வு கேட்டால் எப்படி வாழ்க்கை முடிகிறதோ, அதேபோன்ற ஒரு நிலைதான் மூளை ஓய்வு கேட்டாலும்!

மூளை சரியாகச் செயல்படாமல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதற்கு என எத்தனையோ ஸ்பெஷல் படிப்புகள் வந்தன. ஆனாலும் அவை எதுவுமே முழுமையாக குணப்படுத்த முடியும் என்ற உத்தரவாதத்தை தரத் தயங்குகின்றன. மூளையைப் பற்றிய ஆராய்ச்சிகள் இன்னும் முற்றுப் பெறவில்லை என்பதையே இது காட்டுகிறது.

ஆனால், அக்கு மருத்துவம் மூளையைப் பற்றி முற்றிலுமாகத் தெரிந்து வைத்திருக்கிறது. மூளையின் செயல்பாட்டுக் குறையை மூளைத் தளர்ச்சி, மூளைச் சோர்வு என்கிற வார்த்தைகளில் குறிப்பிடுகிறது அக்கு மருத்துவம். ஏற்கனவே சொன்னதுபோல், மூளை எனி டைம் அலர்ட்டாக இருந்தால் இந்தப் பிரச்னைகள் நம் பக்கமே வராது. எந்நேரமும் மூளையைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க அக்குபிரஷர் பரிந்துரைத்து வந்த ஒரு சிறந்த பயிற்சிக்கு இன்று அமெரிக்கா காப்பிரைட் வாங்கி விட்டது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்களிடம் இருந்து வந்த பழக்கம்தான் அது. கோயில்களில் தோப்புக்கரணம் போட்டபடி, ‘நல்ல புத்தியைக் கொடு சாமி’ என அவர்கள் கேட்டதை, நாம் ஃபாலோ பண்ண மறந்து விட்டோம். விளைவு, ‘சூப்பர் பிரெய்ன் யோகா’ என்கிற பெயரில் இன்று அது அமெரிக்கச் சொத்தாகி விட்டது. தினமும் காலையும் மாலையும் 20 தோப்புக்கரணம் போட்டு வந்தாலே மூளைக்கு உற்சாகம் கிடைக்கும் என்பதை அவர்கள் புரிந்து அனுபவிக்கிறார்கள்.

மேலும் மூளைக்குப் புத்துணர்ச்சி தருவதற்கென்றே சில உபகரணங்கள் உள்ளன. பொகோமா, எலக்ட்ரானிக் அக்குபிரஷர் போன்ற அவற்றைத் தினமும் பயன்படுத்தியும் மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். பாட்டரியில் இயங்கும் இவை, சில அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன. இந்த அதிர்வலைகள், மூளை நரம்புகளில் வினைபுரிந்து, இயக்கத்தைத் தூண்டிவிடுகின்றன. ஏற்கனவே மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த சிகிச்சை நல்ல பலன் தருகிறது. குழந்தைகளைத் தாக்கும் ஆட்டிசம், கவனச்சிதறல், வலிப்பு போன்றவற்றிற்கும் இந்தப் பயிற்சிகள் மூலம் நிவாரணம் தேடலாம்.

மூளை சம்பந்தப்பட்ட பாதிப்பில் இன்னொரு பெரிய பிரச்னை கோமா எனப்படும் ஆழ்நிலை மயக்கம். மூளையின் நரம்பு செல் பாதிக்கப்படும்போது கோமா நிலை ஏற்படுகிறது. ஒருவர் கோமாவுக்குப் போய் எவ்வளவு நாட்களாகியிருந்தாலும் அக்குபஞ்சர் முறையில் முழுவதுமாக அவரைக் குணப்படுத்தலாம்.

இந்தியாவின் பூர்வீக குடிகள் தென்னிந்தியர்களே.

தென்னிந்தியாவில்தான் முதல் முறையாக இந்தியர்கள் உருவானார்கள். அதன் பின்னரே வட இந்தியாவில் மக்கள் குடியேறத் தொடங்கினர் என்று புதிய மரபியல் ரீதியிலான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இந்திய மூதாதையர்கள் குறித்த ஆய்வு ஒன்றை ஹைதராபாத்தில் உள்ள மூ்லக்கூறு மற்றும் மூலக்கூறு உயிரியல் ஆய்வு மையமும், அமெரிக்காவின் ஹார்வர்டு மருத்துவப் பள்ளி, ஹார்வர்ட் பொது சுகாதார கல்லூரி, ஹார்வர்ட் பிராட் கழகம், மாசசூசட்ஸ் தொழில்நுட்பக் கழகம் (எம்.ஐ.டி) ஆகியவை இணைந்து நடத்தி வருகின்றன.
இந்த ஆய்வு குறித்த மிகப் புதிய, அதேசமயம், பல வித்தியாசமான தகவல்களை இவர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்வு முடிவுகள் நேச்சர் இதழில் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஹைதராபாத் மையத்தின் முன்னாள் இயக்குநரும், இந்த ஆய்வறிக்கையின் இணை ஆசிரியருமான லால்ஜி சிங் மற்றும் ஹைதராபாத் மையத்தின் மூத்த விஞ்ஞானியான குமாரசாமி தங்கராஜனும் கூறுகையில், இது வரலாற்றை திருத்தி எழுத உதவும் ஆய்வாகும். 13 மாநிலங்களைச் சேர்ந்த 25 வித்தியாசமான இனக் குழுக்களைச் சேர்ந்த 132 பேரின் ஜீனோம்களிலிருந்து 5 லட்சம் மரபனு குறியீடுகளை ஆய்வு செய்தோம். அனைவருமே இந்தியாவின் பிரதான ஆறு மொழிகளைப் பேசும் இனக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
பழங்குடியினர், மேல் ஜாதி, கீழ் ஜாதி என அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய வகையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுகளின்படி, இந்தியாவில், மிகவும் தொன்மையான 2 பிரிவினர் இருந்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. இந்த தொன்மையான பிரிவினரை, தொன்மையான வட இந்திய மூதாதையர் என்றும் தொன்மையான தென்இந்திய மூதாதையர் என்றும் கூறலாம்.
தற்போது இந்தியாவில் உள்ள 4,635 மக்கள் இனங்கள் அனைத்தும் இந்த 2 தொன்மையான மூதாதையர்களிடம் இருந்து தனித்தனியாகவோ அல்லது இரண்டும் கலப்புற்றோ தோன்றி இருக்கலாம். வட இந்தியர்கள் ஐரோப்பியர்களுடன் ஒத்துப் போகிறார்கள்... இந்த இரு தொன்மையான இந்தியர்களில், தொன்மையான வட இந்தியர்கள் தற்போதைய மேற்கு ஆசிய மற்றும் ஐரோப்பிய மக்கள் இனத்தை மரபியல் ரீதியாக 40 முதல் 80 சதவீதம் வரை ஒத்து இருக்கிறார்கள். ஆனால் தொன்மையான தென் இந்தியர்கள் உலகில் எந்த இன மக்களோடும் மரபியல் ரீதியான தொடர்பு அற்றவர்களாக இருக்கிறார்கள். இதன் மூலம் தென் இந்தியர்கள்தான், தொன்மையான இந்தியாவின் முதல் குடிமக்கள் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.
அதேபோல, அந்தமானில் வசிக்கும் மிகப் பழங்குடியினரான ஓன்கே' என்று அழைக்கப்படும் பிரிவினர் தொன்மையான வட இந்தியர்கள் மற்றும் தென் இந்தியர்களிடம் இருந்து தனித்து காணப்பட்டாலும், தொன்மையான தென் இந்தியர்களோடு சிறிது இணக்கமாக உள்ளனர் என்பது இவர்களுடைய ஆய்வின் முடிவு ஆகும். இதன் மூலம், தொன்மையான தென் இந்தியர்களும், அந்தமான் பழங்குடியின மக்களும் ஒரே மூதாதையரிடம் இருந்து பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து இருக்கக் கூடும் என்பதும் இந்த ஆராய்ச்சியாளர்களின் கருத்து.
அந்தமான் பழங்குடியினர்தான் முதன் முதலில் ஆதிமனிதன் தோன்றிய இடமான ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து தெற்கு கடற்கரை வழியாக சுமார் 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வெளியேறிவர்கள். அதே காலகட்டத்தில்தான் தொன்மையான தென்னிந்தியர்களும் உருவாகியுள்ளனர்.
அதேபோல 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் வட இந்தியர்கள் உருவெடுக்க ஆரம்பித்துள்ளனர். பழங்காலத்தில் இருந்தே இந்தியாவில் ஒவ்வொரு மனித இனப்பிரிவினரும் அவரவர் இனத்துக்குள்ளேயே திருமணம் செய்து கொள்வதாலும், தமக்கே உரிய கலாசார பழக்க வழங்கங்களை ஏற்படுத்திக் கொண்டதாலும், ஒவ்வொரு பிரிவினரும் மரபியல் மற்றும் கலாசார ரீதியாக தனித்தன்மை கொண்டு உள்ளனர். இதன் மூலம், பழங்காலத்தில் இருந்தே இந்திய மக்கள் இனம் தனித்தனி குழுக்களாக பிரிந்து கலப்பின்றி தனித்தன்மையுடன் வாழ்ந்து இருக்கிறார்கள் என்பது தெரிய வந்து உள்ளது. இந்த பிரிவினைதான் கலாசார பரிமாணங்களின் விளைவாக தற்காலத்தில் சாதி பாகுபாடாக உருவெடுத்துள்ளது.
பழங்காலத்தில் இருந்தே ஒவ்வொரு இனத்தினரும் தங்களுக்குள்ளேயே திருமணம் செய்து கொள்வதால் ஒவ்வொரு இனத்தவருக்கும் ஏற்படும் வெவ்வேறு மரபியல் மாற்றங்கள் அவரவர் சந்ததிகளின் வழியாக அந்தந்த இனத்தினரிடையே நிலைபெற்று, அதன் விளைவாக மரபியல் ரீதியிலான பல நோய்கள் வர வாய்ப்பு உள்ளது என்ற உண்மையையும் எடுத்துரைத்து இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 70 சதவீத இந்தியர்கள் மரபியல் ரீதியிலான நோய்களைக் கொண்டவர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பார்சி இனத்தவரிடையே மார்பகப் புற்றுநோய் அதிகம் உள்ளது. திருப்பதி, சித்தூர் பகுதிகளில் மோட்டார் நியூரான் நோய்கள் அதிகம் உள்ளன. மத்திய இந்தியாவில் ரத்த சோகை அதிகம் உள்ளது. வட கிழக்கிலும் இதே பிரச்சினை உள்ளது.

ஆங்கிலத்திற்கும் தாய் நம் தமிழ்தான்


தமிழுக்கும் ஆங்கலத்திற்கும் உள்ள ஒலி ஒத்த சொற்கள். படித்தவுடன் உங்கள் அனைவருக்கும் பிரமிப்பு ஏற்படுவது உறுதி.
Mango - மாங்காய்
Cash - காசு
One - "ஒன்"று
Eight - "எட்"டு
Victory - வெற்றி
Win - வெல்/வென்று
Wagon - வாகனம்
Elachi - ஏலக்காய்
Coir - கயிறு
Eve - அவ்வை
Terra - தரை
Metre - மாத்திரை (unit representation in Tamil)
Name - நாமம் (பெயர் - எ.கா சிவனின் நாமத்தை துதிப்போம், இதை இந்தியில் நாம் என்று சொல்வார்கள்)
Vomit - ஒமட்டு (குமட்டுதல்)
பின்வரும் வார்தையில S ஐ நீக்கிவிட்டு பார்த்தால், அப்படியே தமிழ் சாயல்.
Script - குறிப்பு
Speech-பேச்சு
Speed - பீடு/வேகம் (பீடு நடை - வேக நடை)
Sponge - பஞ்சு
Snake - நாகம்
A"ttack" - தாக்கு
M"ake" - "ஆக்க"ம்
Round - உ"ருண்டை"
Lemon - "இளம"ஞ்சள்காய் (எலுமிச்சை)
Roll - உ"ருள்"
Orate - "உரை"யாற்று
"Know"ledge - "ஞான"ம்
Ginger - இ"ஞ்சி"
Molecule - மூலக்கூறு
Kill - கொல்
Prize - பரிசு
Other - இதர
Tele - தொலை
Teak - தேக்கு
Rice -அரிசி
Aqua - அக்கம்
Venom - விஷம்
Fade - வாடு
Poly- பல
Mega - மிக
Accept - இசைப்படு
Mature - முதிர்
Goat - கடா
Pain - பிணி
Yarn - ஞாண் (அறிக- yarn=thread,
ஞாண் என்றாலும் கயிறு. அரைஞாண் கயிறு என்று சொல்லுவதை நினைவில் கொள்க)
Culprit - கள்ளன்(குற்றவாளி)
Torque - திருகி
Level - அளவு
Mad - மடமை
Surround - சுற்றம்
God - கடவுள்
Birth - பிறந்த
Capture - கைப்பற்று
Want - வேண்டி
Plough - உழவு
Sudden - உடன்
Adamant - அடம்
Fault - பழுது
Shrink - சுருங்கு
Villa - இல்லம்
Path - பாதை
Via/Way - வழியாக
Bottle - புட்டில்/புட்டி
Cot - கட்டில்
Nerve - நரம்பு
Betrothal - பெற்றோர் ஒத்தல் (திருமணத்திற்கு பெற்றோர் சம்மதித்தல்)
Grain - குருணை
Button - பொத்தான்
பிரமிப்பு ஏற்பட்டால் உங்கள் நட்பு வட்டத்திற்கும் அனுப்புங்கள்...

பந்திக்கு முந்து படைக்கு பிந்து

தமிழர்கள் வீரம் மிகுந்தவர்கள். அக்காலத்தில், பிறந்த குழந்தை இறந்தால் கூட. அதன் மார்பை கீறித் தான் புதைப்பார்கள். அவ்வளவு வீரம் விளைந்த மரபில் படைக்கு பிந்து என்ச் சொல்லியிருப்பார்களா?

பந்தி (விருந்தினர்கள்) என்று வந்தால், அவர்களுக்கு முந்தி (முன்னதாக) உணவு பரிமாற வேண்டும்.
படைக்கிறவர்கள் (அதாவது விருந்து படைக்கிறவர்கள்) பிறகு சாப்பிடலாம் என்பதை பந்திக்கு முந்து, படைக்கு பிந்து எனக் கூறினார்கள்.
போருக்குச் செல்பவன் நேரமாகவே சாப்பிட்டு விட்டு (சாப்பிட்டவுடன் போருக்குச் சென்றால் களைப்படைந்துவிடுவான்) படை நடத்துபவனுக்கு பின்புலத்திலிருந்து ஆயுதங்களைக் கொடுத்து உதவி செய்யவும்; தேவைப்படும்போது தேவையான ஆயுதங்களைக கொடுக்கும் வல்லவனாகவும் இருக்க வேண்டும் என்பது இதன் இன்னொரு அர்த்தம்...